.

Sai Ram
தூரத்தில் காதலியின் உருவம் தோன்றும் போது
காத்திருத்தலின் சுவை குன்றி,
கண்களின் தேடுதல் மங்கி
இரு கால்களிடையே தலையை கொடுத்து
அழுது கொண்டிருந்தேன் நான்.

ஆறுதல் வார்த்தைகளோ
அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை.
போய் விடு.

எனக்கான துக்கத்தை
நான் தான் உண்ண வேண்டும்.

லேபிள்கள் , , , | edit post
உங்கள் கருத்து: 
0 Responses

Post a Comment