Loading

Friday, April 17, 2009

மனிதர்கள் - லேட்டாய் வந்த காமவுணர்வு

அவரது பெயர் அபிநயா. நாற்பது வயதாகிறது. தோற்றத்தில் இன்னும் முதுமை எட்டி பார்க்கவில்லை. கண்களில் மட்டும் எப்போதும் ஒரு லேசான சோர்வு. கணவனுடன் தனி குடித்தனம். இரண்டு குழந்தைகள். ஒரு பையன். ஒரு பெண். மூத்தவனுக்கு பதினைந்து வயதாகிறது.

சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போன்ற வாழ்க்கை. கணவர் அரசு உத்தியோகத்தில் இருந்தார். ஸ்கூட்டர் பைக்காக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு காராக மாறி இருந்தது. சொந்த வீடு வாங்கியாகி விட்டது. மிக்ஸி, கிரைண்டர் என சாமான்களும், தங்க நகைகளும் தேவைக்கு அதிகமாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு பெட் ரூமில் ஏஸி மாட்டினார்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடும்பமாய் வெளியே எங்காவது போய் சுற்றி விட்டு காரில் வீடு திரும்புவார்கள். வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு பயணம். வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என ஓர் எண்ணம் உண்டு. இன்னும் கைக்கூடவில்லை.

சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போல தான் வாழ்ந்து வந்தார் அபிநயா. ஆனால் வாழ்க்கை அப்படி சுலபமானதாக இருப்பதில்லை போல. அவரிடம் திடீரென ஒரு மாற்றம். மேக்கப் சாதனங்கள் அதிகபடியாய் வாங்க தொடங்கினார். வயதை குறைக்க பிரயத்தனபட்டார். அணியும் ஆடைகளில் கவர்ச்சி அதிகரிக்க தொடங்கியது. நாற்பது வயதினை நெருங்கும் போது வரும் தடுமாற்றம் இது என நினைத்தார் அவரது கணவர். இல்லை ஒரு நாள் அதே தெருவில் வசிக்கும் வாலிபன் ஒருவனுடன் அபிநயா நெருக்கமாய் அமர்ந்து பேசி கொண்டிருப்பதை பார்க்கும் வரை.

கணவருக்கு சந்தேகம் ஒரு மின்னல் கீற்றாய் மனதில் தோன்றியது. ஆனாலும் அதனை உடனே மறக்க விரும்பினார். காரணம் இருவருடைய வயது. இந்த வயதில் வரக்கூடிய பிரச்சனையா இது? ஆனால் சந்தேக பொறி தீப்பொறியை விட வலிமையானது. படுக்கையில் மனைவி நடந்து கொள்ளும் விதம் புதுவிதமாய் இருந்தது.

திருமணமான சமயத்தில் படுக்கையை கண்டாலே மிரண்ட மனைவி பின் எப்போதும் படுக்கையறையில் அதீத ஆர்வத்துடன் இருந்தது இல்லை. இப்போது திடீரென சில நாட்களாய் ஏன் வெறி பிடித்தவள் போல் ஆகிறாள்.

பிறகு ஒரு நாள் உறவினர் இளைஞன் ஒருவன் அவர்களது வீட்டிற்கு வந்த போது அபிநயா அவன் மீது தேவையில்லாமல் உரசுவது போல தோன்றியது அவரது கணவருக்கு. இது போல வேறு வேறு மாதிரியான சம்பவங்கள் பார்க்க நேரிட்டது. ஆனாலும் பொறுமையாய் இருக்க நினைத்தார் அபிநயாவின் கணவர். கம்ப்யூட்டர் கிளாஸிற்கு போவேன் என மனைவி சொன்ன போது அவரால் அதற்கு மேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை. இது வரை அப்படிபட்ட வார்த்தைகளை அவர் உதிர்த்ததில்லை. ஆனாலும் ஒரு கோபத்தில் சொல்லி விட்டார்.

சண்டை. திருமணமானதில் இருந்து இப்படி ஒரு வாரம் பேசாமல் இருந்ததில்லை. பிள்ளைகளுக்கு கூட எதோ பிரச்சனை என புரிந்தது.

ஒரு நாள் அலுவலகத்தில் அபிநயாவின் கணவர் தனது சக ஊழியருடன் பேசி கொண்டிருந்த போது 'நாற்பது வயசுல நாய் குணம்' தலைப்பு பற்றி பேச்சு மாறியது. காமவுணர்வு நாற்பது வயதில் எப்படி தறிகெட்டு போகிறது என்பதாய் பேச்சு நீண்டது. அபிநயா மீது அவளது கணவருக்கு பரிவு தோன்றியது அப்போது தான். முழுமையான காமவுணர்வே அவளுக்கு இப்போது தான் முதன்முதலாய் தோன்றி இருக்கிறது போல என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டார். சிறு வயதில் கண்டிப்பான பெற்றோர், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடம், மிஸ்டர் பெர்பெக்ட் கணவன் இப்படியாக அவள் நாற்பது வருடங்கள் வாழ்ந்து விட்டாள். இப்போது லேட்டாய் வந்த காமவுணர்வு அவளை தவறான வழியில் அழைத்து சென்று விடக்கூடாது, அதற்கு நாம் தான் அவளுக்கு உதவ வேண்டும் என நினைத்தார் அவளது கணவர்.

இனிப்பு பண்டங்கள், பூ என வாங்கி கொண்டு அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே அன்று கிளம்பி விட்டார். கார் அவரது வீட்டிற்கு போன போது பிள்ளைகள் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. வீடு அசாதாரண அமைதியுடன் இருந்தது. கதவு மிக லேட்டாக தான் திறக்கபட்டது. நைட்டியில் மிக கடுப்பாய் முகத்தை வைத்தபடி கதவை திறந்த மனைவியின் முகத்தில் புரிந்து கொள்ள முடியாத உணர்வுகள் தெரிந்தன. மனதில் இருந்த தெளிவு சற்றே தள்ளாட அபிநயாவின் கணவர் வீட்டிற்குள் நடந்து போகும் போது வீட்டு பின்கதவு தாழிடப்படாமல் இருப்பதை பார்த்தார்.

இரகசியம்: நாற்பது வயதில் சந்தேகம் அதிகமாகும் என்பார்கள். அது உண்மையா என தெரியாது. அபிநயாவின் கணவர் சில மாதங்களுக்கு பிறகு சகஜமாகி விட்டார். ஒன்றிரண்டு வருடத்தில் அபிநயாவும் சகஜமாக மாறி விட்டது போல் தோன்றியது. அன்று பின்கதவு வழியாய் அவசரமாய் வெளியேறிய அந்த இளைஞன் தனது ஷூக்களை வீட்டு வாசல் அருகில் விட்டு சென்று விட்டான். நல்ல வேலையாய் அபிநயாவின் கணவர் அதனை கடைசி வரை கவனிக்கவே இல்லை.

ஓவியங்கள்

1. Acrylic Painting on Stitched canvas (story about it.) By Melissa Fiorentino 

2. Acrylic on metal 2008(Lust and Cinema) By Tyler Haney

மனிதர்கள் தொடர் பதிவுகள் அனைத்தையும் வாசிக்க...

3 comments:

m bala April 18, 2009 1:06 PM  

இரகசியம்: நாற்பது வயதில் சந்தேகம் அதிகமாகும் என்பார்கள். அது உண்மையா என தெரியாது. அபிநயாவின் கணவர் சில மாதங்களுக்கு பிறகு சகஜமாகி விட்டார். ஒன்றிரண்டு வருடத்தில் அபிநயாவும் சகஜமாக மாறி விட்டது போல் தோன்றியது. அன்று பின்கதவு வழியாய் அவசரமாய் வெளியேறிய அந்த இளைஞன் தனது ஷூக்களை வீட்டு வாசல் அருகில் விட்டு சென்று விட்டான். நல்ல வேலையாய் அபிநயாவின் கணவர் அதனை கடைசி வரை கவனிக்கவே இல்லை.

NAALA IRUKU CLIMAX.

தீப்பெட்டி April 18, 2009 9:42 PM  

மிகவும் நன்றாக உள்ளது.

மறுமொழிகள்

Sai's shared items

Nadanthathu Enna's Fan Box

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP