Loading

Tuesday, June 23, 2009

விழிப்பே இல்லாத கனவு

மேகங்கள் திடீரென ஒரு நாள்
வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.

ஆற்றுத்தண்ணீர் போல
அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
போர் விமானங்கள் போல
சோகங்கள் போல
ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
எனக்கு பயமாக இருந்தது.

தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன்.

ஆனால்
முடிவே இல்லாத நீண்ட கனவாக
அது மாறி கொண்டிருந்தது.

அப்போது தான் அது நடந்தது...

0 comments:

மறுமொழிகள்

Sai's shared items

Nadanthathu Enna's Fan Box

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP